சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மூவகை அணுக்க ளுக்கு மறைமையால் விந்து ஞானம் மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம் ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேல் சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே. |
46 |
அருவினில் உருவந் தோன்றி அங்காங்கி பாவ மாகி உருவினில் உருவ மாயே உதித்திடும் உலக மெல்லாம் பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும் ஒருவனே யெல்லா மாகி அல்லவா யுடனு மாவன். |
47 |
அருஉரு ஈனா தாகும் விகாரமும் அவிகா ரத்தின் வருவது மில்லை என்னின் வான்வளி யாதி பூதம் தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும் உருவமின் உருமே றெல்லாம் உதித்திடும் உணர்ந்து கொள்ளே. |
48 |
மண்ணினிற் கடாதி யெல்லாம் வருவது குலால னாலே எண்ணிய உருவ மெல்லாம் இயற்றுவன் ஈசன் தானும் கண்ணுகா ரியங்க ளெல்லாம் காரண மதனிற் காண்பன் பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றிடிற் பகரக் கேள்நீ. |
49 |
சீலமோ உலகம் போலத் தெரிப்பரி ததனால் நிற்கும் கோலமும் அறிவா ரில்லை ஆயினுங் கூறக் கேள்நீ ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும் காலமே போலக் கொள்நீ நிலைசெயல் கடவுட் கண்ணே. |
50 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, வருவது, மெல்லாம், கேள்நீ, உதித்திடும், விந்து, இலக்கியங்கள், ஞானம், மாகி, உருவ