சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
கருதுகா ரணமுண் டாகக் காரிய முள்ள தாகி வருதலால் அநாதி வைய மற்றொரு கடவு ளித்தைத் தருதலால் ஆதி யாகச் சாற்றலு மாகு மாயைக் கொருவனா ரென்னிங் கென்னின் உள்ளவா றுரைப்பக் கேள்நீ. |
36 |
புத்திமற் காரி யத்தால் பூதாதி புருடன் தானும் அத்தனு கரணம் பெற்றால் அறிதலால் அவற்றை மாயை உய்த்திடும் அதனான் மாயைக் குணர்வொன்று மில்லையென்றே வைத்திடு மதனால் எல்லாம் வருவிப்பா னொருவன் வேண்டும். |
37 |
காரிய கார ணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம் பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநி மித்தம் தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம். |
38 |
விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம் வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம் தந்திடுஞ் சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே. |
39 |
வைகரி செவியில் கேட்ப தாய்அத்த வசன மாகி மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம் பொய்யற அடைவு டைத்தாய்ப் புந்திகா ரணம தாகி ஐயமில் பிராண வாயு அடைந்தெழுந் தடைவு டைத்தாம். |
40 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், மாயை, நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், வைகரி, வாயு, மாதி, இலக்கியங்கள், காரிய, தாகி, மாயைக்