சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அழிந்தபின் அணுக்கள் தாமே அகிலமாய் வந்து நின்று கழிந்திடுங் கன்மத் தென்னில் கன்மமும் அணுவுங் கூட மொழிந்திடுஞ் சடமே யாகி மொழிதலான் முடியா செய்தி ஒழிந்திடும் அணுரூ பங்கள் உலகெலா மொடுங்கு மன்றே. |
31 |
காரண அணுக்கள் கெட்டாற் காரிய உலகின் றென்னில் காரண மாயை யாகக் காரியங் காண லாகும் காரண மாயை யென்னை காண்பதிங் காணுவே யென்னில் காரண மாயை யேகாண் காரியம் அணுவிற் கண்டால். |
32 |
காரிய மென்ப தென்னை காரண அணுவை யென்னில் காரியம் அவய வத்தாற் கண்டனங் கடாதி போலக் காரிய உருவ மெல்லாம் அழிதருங் கார ணத்தால் காரிய உறுப்பின் மாயை தருமெனக் கருதி டாயே. |
33 |
தோற்றமும் நிலையு மீறும் மாயையின் தொழில தென்றே சாற்றிடு முலகம் வித்துச் சாகாதி அணுக்க ளாக ஏற்றதே லீண்டு நிற்கும் இல்லதே லியைவ தின்றாம் மாற்றநீ மறந்தா யித்தால் மாயையை மதித்தி டாயே. |
34 |
மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகும் நீயதிங் கில்லை யென்னில் நிகழ்த்திடு முயலிற் கோடு போய்உகும் இலைக ளெல்லாம் மரங்களில் புக்குப் போதின் ஆயிடும் அதுவு மென்னிற் காரணங் கிடக்க வாமே. |
35 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், காரண, காரிய, மாயை, நூல்கள், சுபக்கம், சித்தாந்த, சாத்திரங்கள், சிவஞான, யென்னில், சித்தியார், டாயே, காரியம், இலக்கியங்கள், அணுக்கள்