சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உள்ளது மிலது மின்றி நின்றதொன் றுளதே லுண்டாம் இல்லதே லில்லை யாகும் தோற்றமும் இசையா தாகும் உள்ளகா ரணத்தி லுண்டாம் காரிய முதிக்கும் மண்ணில் இல்லதாம் பங்க டாதி எழில்தரு மியற்று வானால். |
26 |
ஒருபொரு ளொருவ னின்றி உளதில தாகு மென்னில் தருபொருளுண்டேலின்றாம் தன்மையின் றின்றே லுண்டாய் வருதலின் றிலது கார்ய முதலுள தாகு மென்னில் கருதுகா ரியமு முண்டாய்த் தோற்றமுங் கருத்தா வாலாம். |
27 |
காயத்தின் அழிவு தோற்றம் கண்டனம் உலகற் காணா நீஇத்தை உரைத்த வாறிங் கென்னெனில் நிகழத்து முண்மை மாயத்த உலகம் பூநீர் தீவளி வான மாதி யாயித்தா னொன்றி னொன்று தோன்றிநின் றழித லாலே. |
28 |
ஓரிடம் அழியப் பின்னும் ஓரிடம் நிற்கும் ஒக்கப் பாரிடம் அழிவ தின்றாம் என்றிடிற் பயில்வித் தெல்லாம் காரிட மதனிற் காட்டும் அங்குரங் கழியும் வேனில் சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும். |
29 |
காலமே கடவு ளாகக் கண்டனம் தொழிலுக் கென்னில் காலமோ அறிவின் றாகும் ஆயினுங் காரி யங்கள் காலமே தரவே காண்டும் காரணண் விதியி னுக்குக் காலமுங் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண். |
30 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், ஓரிடம், காலமே, கடவு, கண்டனம், இலக்கியங்கள், லுண்டாம், தாகு, மென்னில்