சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அந்தரியா கந்தன்னை மத்திசா தனமாய் கந்தமலர் புகையொளிமஞ் சனம்அமுது முதலாக் சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால் வந்திடும்அவ் வொளிபோல மருவிஅர னுளத்தே |
301 |
புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில் சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச் அறமபாவங் கட்குநாம் என்கடவே மென்றும் திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ |
302 |
இந்தனத்தின் எரிபாலின் நெய்பழத்தின் இரதம் வந்தனைசெய் தெய்விடத்தும் வழிபடவே அருளும் சிந்தனைசெய் தர்ச்சிக்க சிவன்உளத்தே தோன்றித் பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் னுருவப் |
303 |
பயனியல்
பத்தாஞ் சூத்திரம் (304 - 309)
இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம் அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும் பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற் |
304 |
யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும் தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால் |
305 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், செய்த, இதமகிதம், இலக்கியங்கள், கொண்டு