சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பிராமணவியல்
முதற் சூத்திரம் (21-90)
ஒருவனோ டொருத்தீ ஒன்றென் றுரைத்திடும் உலகமெல்லாம் வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே. |
21 |
உதிப்பதும் ஈறு முண்டென் றுரைப்பதிங் கென்னை முன்னோர் மதித்துல கநாதி யாக மன்னிய தென்ப ரென்னின் இதற்கியான் அனுமா னாதி யெடேனிப்பூ தாதி யெல்லாம் விதிப்படி தோற்றி மாயக் காணலாம் மேதி னிக்கே. |
22 |
இயல்புகாண் தோற்றி மாய்கை என்றிடின் இயல்பினுக்குச், செயலதின் றியல்பு செய்தி செய்தியேல் இயல்ப தின்றாம், இயல்பதாம் பூதந் தானே இயற்றிடுஞ் செய்தி யென்னில், செயல்செய்வான் ஒருவன் வேண்டுஞ் செயற்படும் அசேத னத்தால். |
23 |
நிலம்புனல் அனல்கால் காண நிறுத்திடும் அழிக்கும் ஆக்கும் பலந்தரு மொருவ னிங்குப் பண்ணிட வேண்டா வென்னின் இலங்கிய தோற்ற நிற்றல் ஈறிவை இசைத லாலே நலங்கிளர் தோற்ற நாசம் தனக்கிலா நாதன் வேண்டும். |
24 |
சார்பினில் தோன்று மெல்லாம் தருபவன் இல்லை யென்னில் தேரின்இல் லதற்கோ தோற்றம் உள்ளதற் கோநீ செப்பாய் ஓரின்இல் லதுவுந் தோன்றா துள்ளதேல் உதிக்க வேண்டா சோர்விலா திரண்டு மின்றி நிற்பது தோன்று மன்றே. |
25 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, வேண்டா, யென்னில், தோன்று, செய்தி, தோற்ற, தருபவன், இலக்கியங்கள், லாலே, ஒருவன், வேண்டும், தோற்றி