சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பாலரொடு வாலீசர் விருத்தர்பனி மொழியார் சீலமது நிர்ப்பீசம் சமயா சாரம் ஏலுமதி காரத்தை இயற்றித் தானும் சாலநிகழ் தேகபா தத்தி னோடு |
256 |
ஓதியுணர்ந் தொழுக்கநெறி இழுக்கா நல்ல நீதியினால் நித்தியநை மித்திககா மியத்தின் சாதகரா சாரியரும் ஆக்கி வீடு ஆதலினான் அதிகாரை யாம்சமயம் விசேடம் |
257 |
அழிவிலாக் கிரியையினான் ஆதல்சத்தி மத்தான் ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம் வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள் கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி |
258 |
மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி அந்தநிலை யெழுத்தொன்று புவனம் நூற்றெட்(டு) வந்திடுமந் திரம்இரண்டு பதங்கள் மூவேழ் தந்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று |
259 |
வித்தையின்மந் திரமிரண்டு பதம்நா லைந்து தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வம் வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று உத்தமமாம் தத்துவமும் ஒருமூன் றாகும் |
260 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, பதங்கள், திரமிரண்டு, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, தெய்வம், வியாத்தி, இலக்கியங்கள், மந்திரங்கள், வன்னங்கள்