சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடத்திற் பாவம் பாவிக்கும் அதுநா னென்னில் பாவகம் பாவங் கெட்டுப் பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை இறந்து நின்று பாவிக்கப் படுவ தாகும் பரம்பரன் அருளி னாலே. |
246 |
அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும் உன்னிய வெல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும் என்னதி யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும் தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன். |
247 |
ஒன்றெனு மதனால் ஒன்றென் றுரைப்பதுண் டாகை யாலே நின்றனன் வேறாய்த் தன்னின் நிங்கிடா நிலைமை யாலே பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவி னுள்ளே என்றுநின் றிடுத லாலே இவன்அவ னென்ன லாமே. |
248 |
சாதனவியல்
ஏழாஞ் சூத்திரம் (249 -252)
அனைத்துஞ்சத் தென்னின் ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின், முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருள் இரவி முன்போல், நினைப்பதிங் கசத்தே யென்னில் சத்தின் முன்நிலாமை யானும், தனைக்கொடொன் றுணர்த லானும் தானசத் துணரா தன்றே. |
249 |
சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டின் பாலும் ஒத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும். |
250 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், லானும், நூல்கள், சுபக்கம், பாவம், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், சத்தின், யாலே, இலக்கியங்கள், பாவிப்ப, தென்னிற், யானும்