சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஆவதாய் அழிவ தாகி வருதலால் அறிவு தானும் தாவலால் உலகு போகம் தனுகர ணாதி யாகி மேவலால் மலங்க ளாகி விரவலால் வேறு மாகி ஓவலால் அசத்தாம் சுட்டி உணர்பொரு ளான வெல்லாம். |
241 |
மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும் எண்தரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம் கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்த மென்பர். |
242 |
உணராத பொருள்சத் தென்னின் ஒருபய னில்லைத் தானும் புணராது நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும் தணவாத கரும மொன்றும் தருவது மில்லை வானத்(து) இணரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும். |
243 |
தத்துவம் சத்(து) அசத்துச் சதசத்து மன்றென் றாலென் உய்த்துணர்ந் துண்டோ இன்றோ என்றவர்க் குண்டென் றோதில் வைத்திடும் சத்தே யாகும் மனத்தொடு வாக்கி றந்த சித்துரு அதுஅ சித்தாம் மன்த்தினால் தேர்வ தெல்லாம். |
244 |
அறிபொருள் அசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள்சத்தென்னின் அறிபவன் அறியா னாகில் அதுஇன்றுபயனு மில்லை அறிபவன் அருளி னாலே அந்நிய மாகக் காண்பன் அறிபொரு ளறிவாய் வேறாய் அறிவரு ளுருவாய் நிற்கும். |
245 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, மில்லை, அறிபவன், வானத், இலக்கியங்கள், தானும், வாழ்வும்