சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஏது மூன்றாம் இயல்புகா ரியத்தோ டநுப லத்தியிவை, ஓதி னியல்பு மாமரத்தைக் காட்டல் உறுகா ரியம் புகைதன், ஆதி யாய அனல்காட்ட லாகும் அநுப லத்தியது, சீத மின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பிடிலே. |
16 |
புகையால் அனலுண் டடுக்களைபோ லென்னப் புகறல் அந்நுவயம், வகையாம் அனலி லாவிடத்துப் புகையின் றாகும் மலரினொடு, முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே கச்சொல்இவை, தொகையால் உறுப்பைந் தொடுங் கூடச் சொல்லு வாரு முளர்துணிந்தே. |
17 |
போது நாற்றத் தால்அறிதல் பூர்வக் காட்சி அனுமானம் ஓது முறையா லறிவின்அள வுணர்தல் கருதல் அனுமானம் நீதி யான்முற் கன்மபல நிகழ்வ திப்போ திச்செய்தி ஆதி யாக வரும்பயனென் றறிதல் உரையால் அனுமானம். |
18 |
அநாதியே அமல னாய அறிவன்நூல் ஆக மந்தான் பின்ஆதிமா றின்றிப் பேணல் தந்திர மந்தி ரங்கள் மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யாகும் தனாதிஈ றிலாதான் தன்மை யுணர்த்துல் உபதே சந்தான். |
19 |
ஈண்டு பக்கப் போலிநான் கேதுப் போலி யொருமூன்றான், வேண்டும் எழுமூன் றாகும்விளங் குவமைப் போலி யீரொன்பான், காண்டுந் தோல்வித் தானம்இரண் டிருபத் திரண்டாம் கருதிலிவை, யாண்டு மொழிவர் அவையெல்லாம் அளக்கில் அறுபத் தைந்தாகும். |
20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், அனுமானம், சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, போலி, காட்டல், இலக்கியங்கள்