சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இறைவன்தன் சந்நி திக்கண் உலகின்றன் சேட்டை யென்னும் மறைகளும் மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்கண் உறைதரா தசேத னத்தால் உருவுடை உயிர்கட் கெல்லாம் நிறைபரன் சந்நி திக்கண் நீடுணர் வுதிக்கு மன்றே. |
236 |
உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன். |
237 |
தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும் பற்றிப், புரிந்திடும் உணர்வி னோடும் போகமுங் கொடுத்தி யோனி, திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம், விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் மேலோன். |
238 |
அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித் தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்(கு) இருளினை ஔ¤யா லோட்டும் இரவியைப் போல ஈசன். |
239 |
ஆறாஞ் சூத்திரம் (240 -248)
அறிவுறும் பொருளோ ஈச னறிவுறா தவனோ வென்னின் அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும் செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் நெறிதருஞ சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாயே. |
240 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சத்தி, கெல்லாம், இலக்கியங்கள், சந்நி, திக்கண்