சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஐந்தாஞ் சூத்திரம் (231 -239)
பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை அறிதரா அவையே ஆன்மாக்க ளனைத்து மெங்கும் செறிதரும் சிவன்ற னாலே அறிந்திடும் சிவனைக் காணா அறிதரும் சிவனே யெல்லாம் அறிந்தறி வித்து நிற்பன். |
231 |
இறைவனே அறிவிப் பானேல் ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும் குறைவதி கங்கள் தத்தம் கன்மமேற் கோமான் வேண்டா முறைதரு செயற்குப் பாரும் முளரிகட் கிரவி யும்போல் அறைதரும் தத்தங் கன்மத் தளவினுக் களிப்பன் ஆதி. |
232 |
அறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும் அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும் அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே. |
233 |
கருவியால் பொருளால் காட்டால் காலத்தால் கருமந் தன்னால் உருவினால் அளவால் நூலால் ஒருவரா லுணர்த்த லானும் அருவனாய் உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும் ஒருவனே எல்லாத் தானும் உணர்த்துவன் அருளி னாலே. |
234 |
கருவியும் பொருளும் காட்டும் காலமும் கன்மந் தானும் உருவமும் அளவும் நூலும் ஒருவரு முணர்த்த லின்றி அருவனா யுலக மெல்லாம் அறிந்தவை யாக்கி வேறாய் ஒருவனே உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன். |
235 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், லானும், சுபக்கம், நூல்கள், சித்தாந்த, அறிந்திடும், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, அறிந்தவை, அறிவிக்க, ஒருவனே, தானும், னாலே, இலக்கியங்கள், மெல்லாம், நிற்பன், அறித