சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினில் சுழுனை மூன்று வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதம் தந்திடும் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும் உந்திடுங் கரணந்தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே. |
226 |
கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம் காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம் ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே. |
227 |
அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும் செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான் குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான் பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா. |
228 |
உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல் வருசெயல் மருவிச் சத்த மாதியம் விடயம் தன்னில் புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று திரிதரும் சகல மான அவத்தையிற் சீவன் சென்றே. |
229 |
இருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக் குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத் திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம் பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே. |
230 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, செயல்க, சுத்த, இலக்கியங்கள், ளெல்லாம், போது