சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
புருடனே அறிவ னாகில் பொறிபுல னாதி போதம் தருவதென் அறிவு மாயா தனுகர ணாதி பற்றி வருவதிங் கநாதி யாக மலத்தினின் மறைந்து நிற்பன் அருவனாய் இவற்றோ டாளும் அமைச்சரும் அரசும் போல்வன். |
221 |
படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில் கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர் அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோ லான்மா உடலினின் அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக. |
222 |
சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில் ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுமுனை மூன்று நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே. |
223 |
இருவகைச் சாக்கி ராதி அவத்தைக ளியல்பு தானும் இருவகை கீழே நூக்கி உற்பவங் காட்டு மொன்று பெருகமேல் நோக்கித் தீய பிறப்பறுந் திடுமி யோகில் தருவதோர் சமாதி தானும் தாந்துபின் சனனஞ் சாரும். |
224 |
அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும் செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுபே கண்டு கொள்நீ பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட. |
225 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், வத்தை, தன்னில், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, தானும், இலக்கியங்கள், அஞ்ச, தைந்து