சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்(கு) என்னணி யானென் றுன்னி இருந்தனை பிரிந்த போது நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னில் அன்னிய மாகும் உன்னை அறிந்துநீ பிரிந்து பாரே. |
216 |
உடலியா னல்லேன் இந்த உணர்வுயான் அல்ல வான கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்னகை இடரிலா என்ற னான்மா என்றபோ தான்மா வேறோ திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண். |
217 |
புந்தியை மனம தென்றும் மனமது புந்தி யென்றும் சிந்தையைச் சீவ னென்றும் சீவனைச் சிந்தை யென்றும் முந்தனை யான்மா வென்றும் ஆன்மாவை முந்த னென்றும் வந்திடு மென்ற னான்மா என்றது மற்றொன் றைக்காண். |
218 |
அறிவுடல் சிந்தை யான்மா அணைதலால் ஆன்மா வென்பர் எறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென்றாற்போல் பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படும் அபேத மாகிப் பிறிதரா தறிவ தான்மர அறிபொருள் பின்ன மாமே. |
219 |
கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காயம் உண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து கண்டிடுங் கனவுஞ் சொல்லி ஒடுக்கமுங் கருதி வேறாய் உண்டியும் வினையும் உற்றிங் குணர்த்திட உணரா நிற்கும். |
220 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், வேறு, சித்தாந்த, சித்தியார், சிந்தை, உண்டியும், யான்மா, னென்றும், னான்மா, இலக்கியங்கள், கண்டுணர், யென்றும்