சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்திங்(கு) ஆயுமுக் குணங்கள் அந்தக் கரணங்க ளாதி யெல்லாம் காயபெத் தங்க ளாகிக் கலந்துடன் நிற்கு மான்மா. |
211 |
சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி யெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம் ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா. |
212 |
மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராணன் அன்னமயம் உருவாந் தன்மை யுண்டாய்மு ஒன்றுக் கொன்று சூக்குமமாய் வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும் அருவா யான்மாஐங் கோசத்தார்ப் புண்டவற்றின் அகம் புறமாம். |
213 |
தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த் தேர்ப்பாரிற் செலவும்வேறாய்ச் செலுத்துவோர் செய்திதானும் பார்ப்பாய வேடங் கட்டி ஆடுவோர் பரிசு போலும் ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மாநின் றாட்டு மாறே. |
214 |
என்னுடல் பொறிபி ராணன் கரணம்என் னுணர்வென் றக்கால் தன்னின்வே றாகும் நீஎன் றன்மனை யென்ற வெல்லாம் நின்னின்வே றாகும் என்னின் நீங்கிடா இவையிங் கென்னின் உன்னின வாகும் நீயாம் உகிர்மயிர் உகவுங் காண்டி. |
215 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, றாகும், ராணன், இலக்கியங்கள், நிற்கு, மான்மா