சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உடலினின் ஏக தேசி உயிரெனின் உருவாய் மாயும் படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில் சுடர்தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிடம் அறிவுண் டாகும் அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டுமன்றே. |
206 |
உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின் மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும் பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண் வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயுமன்றே. |
207 |
எங்குந்தான் வியாபி யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில், தங்கிடும் அவத்த போக்கு வரவுகள் சாற்றால் வேண்டும், பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும், இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும். |
208 |
சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகளுடல் மறைத்த தென்னின் வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம் ஒத்துறும் மலமற் றாலும் உறுமலம் வீடு மின்றாம் பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே. |
209 |
அசித்தரு வியாப கம்போல் வியாபகம் அருவ மின்றாய் வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா. |
210 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், வேண்டும், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், வாயில், தென்னின், இலக்கியங்கள்