சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அருவுரு வென்னில் ஆன்மா அருவுரு வாவ தின்றாம் உருவரு வாகா தாகும் ஒருபொருட் கிரண்டு தன்மை வருவது மில்லை காட்ட வன்னிபோல் மருவு மென்னின் உருவமுங் காண வேண்டும் உண்மையும் ஒழிந்து போமே. |
201 |
சந்திரன் வடிவு போலத் தான்அரு வுருவ மென்னின் வந்துநங் கண்ணிற் றோனறும் வடிவுள தாமு யிர்க்கும் இந்தவூ னுருவந் தானாய் எழுவது முயிரே யென்னில் பந்தமாய் அசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே. |
202 |
அருவவி காரி யான்மா ஆகாயம் போல வென்னின் உருவினைக் கட்டி யாட்டி ஓட்டிமீட் டுலாவப் பண்ணி மருவிநிற் பிதி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும் பெருவிகா ரங்க ளெல்லாம் தருவதென் பேசி டாயே. |
203 |
அசித்தெனின் உணராதான்மா அசித்துச்சித் தாகுமென்னின் அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய்நில்லா(து) அசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம். |
204 |
உயிரினை அணுவ தென்னின் உடல்பல துவார மோடும் பயில்வுறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லா(து) அயர்வுறும் அசித்தாய்ப் பூத அணுக்களி னொன்ற தாகும் இயல்புறும் அவய வத்தால் அணுவுரு இறக்கு மன்றே. |
205 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, தாகும், சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, மன்றே, அசித்துச்சித், மென்னின், இலக்கியங்கள், அருவுரு, தின்றாம்