சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அறிவிச்சை செயல்களெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல் குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி நெறியுற்று நிற்கு மென்னில் நிகழபுலன் கரண மெல்லாம் செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமா சீவ னார்க்கே. |
196 |
குணங்களை யின்றி யொன்றாம் குறியு டைத்தான்மா வென்னின் இணங்கிடா இச்சா ஞானக் கிரியைகள் இவையு டற்கட் பிணங்கிடுஞ் சந்நி திக்கண் எனிற்பிணத் துறக்கத் தின்றாம் உணங்கிடும் கரண மென்னில் சந்நிதி ஒழிந்த தன்றே. |
197 |
சந்நிதி குணம தாகும் தானென்போல் என்னிற் காந்தம் முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றாம் உன்னுத லொடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல் என்னுமித் தொழில்கள் மற்றும் இயற்றுவ தான்மா வென்னே. |
198 |
உருவுயி ரென்னின் இந்த உடலினுட் காண வேண்டும் வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூத மாகும் கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும் கண்ணின் மருவிடா தென்னின் உன்றன் வாயினால் உருவன் றென்னே. |
199 |
சூக்கும உருவ தென்னில் தூலகா ரணம் தாகும் ஆக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பின் நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின் ஆக்கிடும் உருவமெல்லாம் அசித்துமாய் அநித்த மாமே. |
200 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, வேண்டும், தாகும், இலக்கியங்கள், மென்னில், சந்நிதி