சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இலக்கணவியல்
நான்காஞ் சூத்திரம் (191 - 230)
உணர்வன கரண மென்னின் ஒன்றையொன் றுணரா வெவ்வே(று) அணைதருஞ் செயல்கள் நான்கும் அறிந்தவை அடக்கி ஆக்கிப் புணருமுட் கரண மாக்கிப் புறக்கரு வியினும் போக்கி இணைதரு மிவற்றின் வேறாய் யானென தென்ப தான்மா. |
191 |
கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும் மருவிஆன் மாவே என்ன வரும்தீப மெனத்தெ ரிந்தாங்(கு) ஒருவியான் மாவி னுண்மை உணர்ந்தவர் தமையு ணர்ந்தோர் தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம். |
192 |
அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் மனம்புத்தி அகங்கா ரங்கள் செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும் ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்குமா பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும். |
193 |
அயன்அரி அரனு மீசர் சதாசிவம் அதிதெய் வங்கள் உயவரும் அவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப் பயனுறும் அஞ்சில் ஆன்மாப் பரவிடில் அசித்தாம் பார்க்கில் சயமுறு வளியி ரண்டும் தவிர்த்துறில் தானுந் தோன்றும். |
194 |
ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்ட மென்னில் பார்ப்பார்கட் கான்மா இன்றாய்ப் பலபொரு ளுண்மையாகும் சேர்ப்பாய பலவே உண்மை என்றிடில் சென்றி வற்றை ஓர்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லாம் உணர்பொருள் வேறதாமே. |
195 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், தோன்றும், இலக்கியங்கள், நான்கும்