சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல உணக்கியே உழல்வீர் உங்க ளுடலுயிர் உணர்வு மெல்லாம் கணத்திடைத் தோன்றி மாயும் காயமென் றறிந்தொ ருக்கால் வணக்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பன். |
186 |
மூன்றாஞ் சூத்திரம் (187- 190)
உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச் செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப் பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில் துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம். |
187 |
உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின் உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான் உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக்கென்னின் உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே. |
188 |
அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியாவாகும் அறிவதும் ஒன்றொன் றாக ஒன்றொன்றாய் அறியு மென்னின் அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா ஐந்தையுங் கொண்(டு) அறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறி அறிந்தி டாவே. |
189 |
அறிந்திடும் பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால் அறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை அறிந்திடு முதலி யாகின் அதுநிற்கக் கரணம் போகா அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா. |
190 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், போகா, அறிந்திடும், வாயுப், இலக்கியங்கள், உடலின்வே, உணர்வ, உடலினின்