சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே. |
181 |
மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம் ஆனிடத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர் ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார். |
182 |
கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவ தாயும் பரிணமித் தழிவ தாயும் பாலனாய் அழிவ தாயும் தருணனாய் அழிவ தாயும் தான்நரைத் தழிவ தாயும் உருவமே யழியே யானால் உள்ளபோ தேபார் உய்ய. |
183 |
ஒருபுலன் நுகரும் போதங் கொன்றில்லை ஒன்றன் பாலும் வருபயன் மாறி மாறி வந்திடும் எல்லாம் மாறும் ஒருபொழு துணரி னுண்டாம் அல்லதிவ் வல்லல் வாழ்க்கை மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே. |
184 |
அரிசனம் பூசி மாலை அணிந்துபொன் னாடை சாத்திப் பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட வரிசின்ன மூதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலால் பிணத்தோ டொப்பர். |
185 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், தாயும், சுபக்கம், நூல்கள், சித்தாந்த, அழிவ, தழிவ, சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், மாறி, சமயம், இலக்கியங்கள்