சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல் மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும் இம்மலம் மூன்றி னோடும் இருமல மிசைப்பன் இன்னும். |
176 |
மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும் ஏயும்மும் மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவும் தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும் ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும். |
177 |
மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச் சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும் நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண் அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே. |
178 |
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ(டு) எண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தால் உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து தித்தல் கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண். |
179 |
நரர்பயில் தேயந் தன்னில் நான்மறை பயிலா நாட்டில் விரவுத லொழிந்து தோன்றல் மிக்கபுண் ணியந்தா னாகும் தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே. |
180 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், மலங்கள், தென்றும், இலக்கியங்கள், காரி