சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இரந்தர மாகி வான்றான் இடங்கொடுத் திடும்ச லித்துப் பரந்தவை திரட்டும் கால்தீச் சுட்டொன்று வித்தல் பண்ணும் நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயும் நீர்மண் தானும் உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே. |
156 |
மண்புனல் அனல்கான் வான்பால் படிவுநாற் கோண மாகும் தண்பிறை மூன்று கோணம் தகுமறு கோணம் வட்டம் வண்பொன்மை வெண்மை செம்மைகறுப்பொடு தூமவன்னம் எண்தரும் எழுத்துத் தானும் லவரய ஹவ்வு மாமே. |
157 |
குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி அறுபுள்ளி அமுத விந்து அதிதெய்வம் அயன்மா லாதி செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வம் நெறிதரு கலைஐந் திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை. |
158 |
சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும் இத்தகை மையின்இ யம்பும் இவைமுப்பத் தொன்று மாகத் தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில். |
159 |
ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்அ சுத்தந் தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வற்கு வந்திடும் பிரேர காண்டம் மருவுபோக சயித்தி ரத்தோ(டு) அந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே. |
160 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, னோடு, மாமே, இலக்கியங்கள், தானும், கோணம்