சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தத்துவ ரூப மாகும் தரும்அரு வுருவ மெல்லாம் தத்துவம் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும் தத்துவம் தன்னிற் சாரும் அணுக்கள்சா தாக்கி யத்தில் தத்துவ சத்தம் சாரும் சகலமும் தத்து வங்காண். |
161 |
தத்துவம் எண்மூன் றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும், வித்தையி னொடுங்கும் ஆறும் சிவத்தினி னொடுங்கும் மூன்றும், நித்ததத் துவம்இம் மூன்றும் என்பர்கள் இரண்டு நின்ற, சுத்தமாம் சிவத்தொ டுங்கும் தோற்றமும் இதுபோ லாகும். |
162 |
மொய்தரு பூத மாதி மோகினி அந்த மாகப் பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று மெய்தருஞ் சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே. |
163 |
சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருள் உருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றினொன்றாய்ப் பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய் நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்ப னென்பர். |
164 |
சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும் எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள். |
165 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், தத்துவம், சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, மாதி, விந்து, யாகி, மூன்றும், ஈசன், மெல்லாம், இலக்கியங்கள், தத்துவ, சாரும், டுங்கும், னொடுங்கும்