சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நற்செவி துவக்குக் கண்நா நாசிஐந் தினையு நல்லோர் புத்திஇந் திரிய மென்று புகன்றனர் இவைத மக்குச் சத்தநற் பரிச ரூப இரதகந் தங்க ளைந்தும் வைத்தனர் விடய மாக அடைவினின் மருவு மென்றே. |
151 |
வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே ஆக்கிய வசன கமன தானமும் விசர்க்கா னந்தம் ஊக்கமார் ஐந்து மைந்தின் தொழிலென ஓதி னாரே. |
152 |
வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி யாகும் ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும் ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர் மாயாள்தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா. |
153 |
ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்க ளென்று பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தின் நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும் ஆசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான். |
154 |
சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத் தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்(கு) ஏற்ற மாமோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும் ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவத் தாமே. |
155 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, கருவி, சாத்திரங்கள், சித்தாந்த, யாகும், தன்மாத், விடய, மனாதி, பரிச, இலக்கியங்கள், இரதகந், தங்க, ளைந்தும்