சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண் இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும் வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே. |
146 |
வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித் தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும் இருங்குண ரூப மாகி இயைந்திடு மெங்கும் ஆன்மாப் பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே. |
147 |
சித்தமாம் அவ்வி யத்தம் சிந்தனை யதுவுஞ் செய்யுஞ் புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப் பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும். |
148 |
ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய் ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியான் என்ன தென்றே நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர் பாங்கார்பூ தாதி வைகா ரிகம்தைச தம்தா னென்றே. |
149 |
மதுமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையின் நிற்கு மாங்கே இனமல சோத்தி ராதி கன்மஇந் திரிய மெல்லாம் முனமுரை செய்த வைகா ரிகம்தரு மென்பர் முன்னோர். |
150 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, மென்பர், வைகா, ஞானக், இலக்கியங்கள், பண்ணி, நிற்கும்