சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அரன்விதி யருள தென்றே அறைந்தனம் அதுவு முன்னே தரைநர கருந்து றக்கம் தனுகர ணாதி யெல்லாம் வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தால் தீர்த்துப் பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமும் சூட்டும். |
141 |
எழுமுடல் கரண மாதி இவைமலம் மலம லத்தாற் கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னில் செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன். |
142 |
நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர் சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே. |
143 |
மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்றும் ஆயஅக் கால மூன்றாய் ஆக்கியு மளித்தும் போக்கிக் காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம். |
144 |
நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும் அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும். |
145 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பண்ணி, தோன்றி, நியதிபின், இலக்கியங்கள், தனுகர, யெல்லாம்