சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அவ்வவ யோனி தோறும் அவ்வவ உலகந் தோறும் செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா சீவன் சேரா இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெய லானாற் செய்த எவ்வுரு வுந்தன் கன்மான் மாற்றுவன் இறைவன் தானே. |
136 |
மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னில் கூறிய சூக்கு மத்தாம் உருவெனிற் குறியொன் றென்னின் வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகும் தேறுநீ யொருவ னாலிச் செயலெலாம் சிவனா லாகும். |
137 |
சூக்குமங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தின் ஆக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்(கு) ஓக்கிய சத்தி யுண்டாய் உடல்தருங் காலம் உற்று நீக்கிட மரம்பின் வேரோர் நீள்மர நிகழ்த்து மாபோல். |
138 |
விதிப்படிச் சூக்கு மத்தே உருவரும் வினையா லிங்கே உதித்திடா உருவ மாக உருவரு மரங்கள் வித்தில் கதித்தெழு மரமும் வித்தும் கழியும்பின் அழியுஞ் சூக்க மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே. |
139 |
தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு மூலமா னதற்கு மூல மோகினி அதன்மு தற்றான் மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாம் சாலவின் றாகும் ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது. |
140 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சூக்கு, சித்தியார், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், மெல்லாம், சத்தி, இலக்கியங்கள், அவ்வவ, தோறும்