சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சங்கமம் தாப ரங்கள் தத்தம்கன் மத்துக் கீடா அங்குரு யோனி மாறும் அச்சுமா றாதிங் கென்னின் இங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப ஈட்டம் இங்குவான் சுரர்ளாயோ நரர்களாய் அருந்து வாரோ. |
131 |
நரர்களாய்த் துய்ப்ப ரென்னின் நரர்பதி சுரரு லோகம் சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னஅச் சழியு மாகும் சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணிடாரே. |
132 |
வண்டுக ளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றோர் செந்துப் பண்டைய உருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும் கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தால் மாறு மென்றே கொண்டன சமய மெல்லாம் இச்சொல் நீ கொண்ட தெங்கே. |
133 |
அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான் பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுதும் ஆண்டு நிகரிலா அரச னாகும் நிலந்திநீ டுலகம் போற்றச் சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே. |
134 |
செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால் வைப்புறு மியோனி எல்லாம் மாறிவந் திடாவிங் கென்னின் எப்படி யானுஞ் செய்திக் கிறைகரி யாவ னென்றே முற்பட மொழிந்தே னெல்லாம் முதல்வன்தன் விதியே யாகும். |
135 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, துய்ப்ப, தானே, கென்னின், இலக்கியங்கள், யோனி, மாறும்