சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே யாதனா சரீர மாகி இன்பத்துன் பங்க ளெல்லாம் நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத் தீதிலா அணுவா யோனி சேர்ந்திடும் சீவ னெல்லாம். |
126 |
உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கு மொன்றிற் படர்வுறா துறும்பா வத்தாற் பாடாணம் போற்கி டந்து கடனதாம் காலஞ் சென்றாற் கடுநர கதனில் வீழ்ந்தங்(கு) இடருறும் உருவங்கன்மத் தளவினில் எடுக்கு மன்றே. |
127 |
பன்னகம் அண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர் துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போல உன்னிய வுயிர்கள் தூல வுடல்விட்டு வானி னூடு மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல். |
128 |
தன்மமோ டதன்ம வாகித் தானிரு பயனுந் தந்து நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக் கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும். |
129 |
இருவினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம் வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்துத் தருசெயல் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து செல்லும். |
130 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, சித்தியார், யோனி, இலக்கியங்கள்