சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை ஆணையில் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன் ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வம் நல்கி ஆணையும் வைப்பன் எங்கும் ஆணையே ஆணை யேகாண். |
121 |
அரசனும் செய்வ தீசன் அருள்வழி அரும்பா வங்கள் தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத் துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர் நிரயமும் சேரார் அந்த நிரயமுன் நீர்மை ஈதாம். |
122 |
அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின் இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன் பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன் மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன். |
123 |
மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா வருத்திடும் பிணிகள் தப்பில் தப்பிய வழியுஞ் செய்யத் திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன் உரைத்தநூற் சிவனுமின்னே உறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன். |
124 |
மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும் திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாம் கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன் அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன். |
125 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், தீர்ப்பன், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, மருத்துவன், பிணிகள், நூலின், இலக்கியங்கள், வைப்பன், உரைத்த