சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோவந்(து) அங்குவான் தருவா ரன்றேல் அத்தெய்வ மத்த னைக்காண் எங்கும்வாழ் தெய்வமெல்லாம் இறைவனாணையினால் நிற்ப(து) அங்குநாம் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன். |
116 |
காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்றில்லான் பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே. |
117 |
தாபர சங்க மங்க ளென்றிரண் டுசரவில் நின்று மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன் நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை யாய்பரம் பொருளை நாளும் அர்ச்சிநீ அன்பு செய்தே. |
118 |
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும் பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே. |
119 |
மறைகளீ சன்சொல் அச்சொல் வழவாரா உயிரை வைக்கும், சிறைகள்மா நிரயம் இட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும், உறையும்மா பதிகள் உம்ப ருலங்கள் யோனிக் கெல்லாம், இறைவனா ணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும். |
120 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், பூசை, சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், செய்த, செய்யும், இலக்கியங்கள்