சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தானஞ்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி ஊனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும் ஈனமில் செய்தி ஈச னிடும்பணி இவைநாம் செய்தால் நூனங்கள் அதிக நோக்கி நகர்விப்பன் வினைநோய் தீர. |
111 |
உலகுடல் கரணங் காலம் உறுபலம் நியதி செய்தி பலவிவை கொண்டுகன்மம் பண்ணுவ துண்பதானால் நிலவிடா திவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா(து) அலகிலா அறிவ னாணை அணைத்திடும் அருளி னாலே. |
112 |
ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம் வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி இழுக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள். |
113 |
மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச் சினமுத லகற்றி வாழும் செயலற மானா லியார்க்கும் முனமொரு தெய்வ மெங்கும் செயற்குமுன் னிலையா மன்றே. |
114 |
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. |
115 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், செய்தி, சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, சித்தியார், இலக்கியங்கள்