சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின் வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும் இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும். |
106 |
செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின் முயலுமிச் செயல்க ளிங்கே முழுவதும் அழியு மெங்கே பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே வயலிடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல். |
107 |
செய்க்கிடுந் தழையும் தின்னுந் திரவிய மதுவும் போல உய்த்திடுஞ் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை யென்னி வைத்திடுஞ் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றின்மாய்ந்தால் மெய்த்திடும் பலம்உனக்கு மலமலான் வேறு முண்டோ. |
108 |
திரவியம் உவமை யன்று செய்திக்கண் திரவி யங்கள் விரவிய விடத்தே வீந்து பலந்தரும் இம்மை அம்மை பரவிநீ பார்நீர் அங்கி பாததிரத் திட்ட வெல்லாம் கரவிடு மிங்கே எங்கே பலன்கொளக் கருதி னாயே. |
109 |
செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர் எய்தவே பலன்க ளீனும் என்றிடின் இருஞ் சுவர்க்கம் பொய்யர்வாழ் நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த(து) ஐயனே அழகி துன்சொல் இந்திர சால மாய்த்தே. |
110 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், கிடந்து, தழையும், இலக்கியங்கள், கெட்டே