சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
முற்செயல் விதியை இந்த முயற்சியோ டனுப வித்தான் இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர் அச்செய லானால் இங்கும் அவைசெயின் மேலைக் காகும் பிற்செயா தனுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி. |
101 |
மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம் மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம் மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே. |
102 |
இதமகி தங்கள் என்ப திகல்மன வாக்குக் காயத்(து) இதமுயிர்க் குறுதி செய்தல் அகிதமற் றதுசெய் யாமை இதமகி தங்க ளெல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு) இதமகி தத்தால் இன்பத் துன்பங்கள் ஈவ னன்றே. |
103 |
இறைவனிங் கேற்ப தென்னை இதமகி தங்க ளென்னின் இறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும் அறமலி இதஞ்செய் வோருக் கனுக்கிர கத்தைச் செய்வன் மறலி அகிதஞ் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன். |
104 |
நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ(து) அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன் எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே யென்றும். |
105 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், இதமகி, நூல்கள், சுபக்கம், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, தங்க, மத்தி, நிக்கிர, யென்றும், மாகி, இலக்கியங்கள், தங்கள், ளெல்லாம்