சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின் மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும் உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே. |
96 |
இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம் இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல் இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே. |
97 |
இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித் தருவினை யதனில் அந்தந் தானறும் துயருந் தங்கும் ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே. |
98 |
பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால் கூறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே. |
99 |
உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின் விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும் தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின் இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல். |
100 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், இம்மையே, கன்மம், முயற்சி, இலக்கியங்கள், செய்தி, இன்பத், இம்மையின்