சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இரண்டாஞ் சூத்திரம் (91 -186 )
உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும். |
91 |
ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின் அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும் சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே. |
92 |
உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய் வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன் தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான் வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே. |
93 |
இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள் தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே. |
94 |
இருவினை யென்னை இன்பத் துன்பங்கள் இயல்ப தென்னின் ஒருதன்மை இயல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி வருவதென் மலருந் தீயும் மருவலின் வாசம் வெம்மை தருவதென் நீரென் செய்து தானியல் பாகு மன்றே. |
95 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, நின்றனன், சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, இருவினை, இன்பத், வருவது, இலக்கியங்கள், வேறாய், உயிர்கள்