சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ் சுத்ததத் துவஞ்சி வன்தன் சுதந்திர வடிவ மாகும் நித்தமென் றுரைப்பர் கால நீங்கிய நிலைமை யாலே வைத்திலர் முற்பிற் பாடு வருவித்தார் கருமத் தாலே. |
86 |
ஒருவனே இராவ ணாதி பாவக முற்றாற் போலத் தருவனிவ் வுருவ மெல்லாம் தன்மையும் திரியா னாகும் வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும் இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும். |
87 |
பொன்மைநீ லாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின் தன்மையாய் நிற்கு மாபோல் சத்திதன் பேத மெல்லாம் நின்மலன் தானாய்த் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன் முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந்தான் முளையா னன்றே. |
88 |
சத்தியுஞ் சிவமு மாய தன்மைஇவ் வுலக மெல்லாம் ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி வைத்தனன் அவளால் வந்த ஆக்கமிவ் வாழ்க்கை யெல்லாம் இத்தையும் அறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார். |
89 |
சிவன்அரு உருவும் அல்லன் சித்தினோ டசித்தும் அல்லன் பவமுதல் தொழில்க ளொன்றும் பண்ணிடு வானும் அல்லன் தவமுத லியோக போகம் தரிப்பவ னல்லன் தானே இவைபெற இயைந்து மொன்றும் இயைந்திடா இயல்பினானே. |
90 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், மெல்லாம், அல்லன், சாத்திரங்கள், சித்தியார், சிவஞான, சித்தாந்த, இலக்கியங்கள், சத்தி