சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சத்திதான் பலவோ வென்னில் தானொன்றே அநேக மாக வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லாம் உய்த்திடு மொருவன் சத்தி போலரன் உடைய தாகிப் புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம். |
81 |
சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞான மாகும் உய்த்திடு மிச்சை செய்தி இவைஞானத் துளவோ வென்னின் எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி வைத்தலான் மறைப்பில் ஞானால் மருவிடுங் கிரியை எல்லாம். |
82 |
ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி நின்றிடுஞ் சத்தி இச்சை உயிர்க்கருள் நேச மாகும் நன்றெலாம் ஞான சத்தி யால்நயந் தறிவன் நாதன் அன்றருட் கிரியை தன்னால் ஆக்குவன் அகில மெல்லாம். |
83 |
சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்பான் ஆவனென் றிடின்அ நாதி மலம்இவற் றினைம றைக்கும் காவல னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன் பாவியாம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற் றாகும். |
84 |
ஞானமே யான போது சிவன்தொழில் ஞான மொக்கின் ஈனமில் சதாசி வன்பே ரீசனாந் தொழில தேறின் ஊனமேற் கிரியை வித்தை உருத்திரன் இலய போகம் ஆனபே ரதிகா ரத்தோ டதிகர ணத்த னாமே. |
85 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சத்தி, சித்தியார், கிரியை, சித்தாந்த, சாத்திரங்கள், இச்சா, ஞானக், செய்தி, உய்த்திடு, இலக்கியங்கள், மாகும், மிச்சை