சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அத்துவா மூர்த்தி யாக அறைகுவ தென்னை என்னின் நித்தனாய் நிறைந்த வற்றின் நீங்கிடா நிலைமை யானும் சித்துடன் அசித்திற் கெல்லாம் சேட்டித னாத லானும் வைத்ததாம் அத்து வாவும் வடிவென மறைக ளெல்லாம். |
76 |
மந்திர மத்து வாவின் மிகுத்தொரு வடிவ மாகத் தந்ததென் அரனுக் கென்னில் சகத்தினுக் குபாதா னங்கள் விந்துமோ கினிமான் மூன்றா மிவற்றின்மே லாகி விந்துச் சிந்தையா ரதீத மான சிவசத்தி சேர்ந்து நிற்கும். |
77 |
சுத்தமாம் விந்துத் தன்னில் தோன்றிய ஆத லானும் சத்திதான் பிரேரித் துப்பின் தானதிட் டித்துக் கொண்டே அத்தினாற் புத்தி முத்தி அளித்தலால் அரனுக் கென்றே வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம். |
78 |
மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத் தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத் தானும் அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே. |
79 |
அயன்றன் ஐஆதி ஆக அரனுரு வென்ப தென்னை பயந்திடுஞ் சத்தி யாதி பதிதலாற் படைப்பு மூலம் முயன்றனர் இவரே யாயின் முன்னவ னென்னை முற்றும் நயந்திடும் அவனி வர்க்கு நண்ணுவ தொரோவொன் றாமே. |
80 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சித்தியார், மந்திர, சித்தாந்த, சாத்திரங்கள், மாகத், வடிவ, சத்தி, அரனுக், லானும், இலக்கியங்கள், தென்னை, வடிவென, மறைக, ளெல்லாம்