சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றலால் உலக நீங்கி நின்றனன் என்று மோரார் அன்றிஅவ் வேட மெல்லாம் அருள்புரி தொழிலென் றோரார் கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணமென் றோரார். |
71 |
நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில் தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார். |
72 |
கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு விண்ணுசு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான் எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித் திமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார். |
73 |
படைப்பாகித் தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையும் நூலும், இடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும், அடைப்பானாம் அதுவும் முத்தி யளித்திடு மியோகும் பாகந், துடைப்பானாந் தொழிலும் மேனி தொடக்கானேற் சொல்லொ ணாதே. |
74 |
உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே. |
75 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், தொழிலும், றோரார், இலக்கியங்கள், தரித்துக்