சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஆரணம் ஆக மங்கள் அருளினால் உருவு கொண்டு காரணன் அருளா னாகில் கதிப்பவ ரில்லை யாகும் நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம் சீரணி குருசந் தானச் செய்தியும் சென்றி டாவே. |
66 |
உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றும் கருமமும் அருள ரன்றன் கரசர ணாதி சாங்கம் தருமரு ளுபாங்க மெல்லாம் தானருள் தனக்கொன் றின்றி அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே. |
67 |
உலகினை இறந்து நின்ற தரன்உரு வென்ப தோரார் உலகவ னுருவில் தோன்றி ஒடுங்கிடு மென்றும் ஓரார் உலகினுக் குயிரு மாகி உலகுமாய் நின்ற தோரார் உலகினி லொருவ னென்பர் உருவினை யுணரா ரெல்லாம். |
68 |
தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாதர் ஆவது முணரார் ஆதி அரிஅயற் கறிய வொண்ணா மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார். |
69 |
போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார் யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார் வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார் ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர். |
70 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், தோரார், ஓரார், னென்பர், நின்ற, சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, மோரார், இலக்கியங்கள், ரெல்லாம்