சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும் மாயஆ ணவம கன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும் நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால். |
61 |
சத்தியே வடிவென் றாலும் தான்பரி ணாம மாகும் நித்தமோ அழியும் அத்தால் நின்மலன் அருவே யென்னின் அத்துவா மார்க்கத் துள்ளான் அலனிவன் அருமை தன்னைப் புத்திதா னுடையை போல இருந்தனை புகலக் கேள்நீ. |
62 |
உலகினில் பதார்த்த மெல்லாம் உருவமோ னருவ மாகி நிலவிடு மொன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல அலகிலா அறிவன் றானும் அருவமே யென்னி லாய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்திடாயே. |
63 |
பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான் அந்தமும் ஆதி யில்லான் அளப்பில னாத லாலே எந்தைதான் இன்ன னென்றும் இன்னதா மின்ன தாகி வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே. |
64 |
குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆத லானும் செறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும் வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும் நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே. |
65 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, நின்மலன், லாலே, இலக்கியங்கள், மாகும், ஞானத்