சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சொன்னஇத் தொழில்க ளென்ன காரணந்தோற்ற வென்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாம்உ யிர்க்கு மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதுஞ் சொல்ல லாமே. |
56 |
அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம் கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில் தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்தி தானு பழிப்பொழ பந்தம் வீடு பார்த்திடின் அருளே எல்லாம். |
57 |
அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. |
58 |
நண்ணிடும் உருவ மென்னின் நமக்குள உருவம் போலப் பண்ணிட ஒருவன் வேண்டும் இச்சையேற் பலரும் இச்சை கண்ணிய உருவங் கொள்ளேம் யாம்பெருங் கடவுள் தானும் எண்ணிய யோக சித்தர் போலுரு இசைப்பன் காணே. |
59 |
வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ளு மாபோல் உத்தமன் கொள்வ னென்னின் அவர்களி லொருவ னாவன் அத்தகை யவர்க ளெல்லாம் ஆக்குவ தருளா லாங்கு வைத்தது மாயை யென்னின் வடிவெலா மாயை யாமே. |
60 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், நின்ற, சித்தர், மாயை, உருவா, இலக்கியங்கள், எல்லாம், கன்ம, ளெல்லாம்