சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின், வந்தி டாவுணர் விந்தி யங்களும் வன்ன பன்மையும் இன்மையாம், புந்தி யோடிய வன்ன போக குணங்கள் பூத புணர்ச்சிதான், தந்தி டாதிவை பேத மாயிட வந்த வாவினை தந்தவா. |
41 |
அறிவு பூதம தென்னில் வேறு புறத்த தறிந்தமை கண்டடிலம் செறிவு தான்உ டலத்தெ னில்சவ மான போதுடல் பேதருமோ குறிகொ ளாதுடல் வாயுவானது கூடி டாமையின் என்னின்நீ பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்க மென்பிற வாததே. |
42 |
அறிவு டற்குண மென்னில் ஆனைய தததி அந்தம் எறும்பதா உறுமு டற்பெரி தான வற்றில் உதித்தி டும்பெரி தாகவே சிறுவு டற்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமமும் பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவதென்சில பேசிடே. |
43 |
போத மம்மெலி வவகி யும்மலி பூத மானவை கூடலிற் பேத மோடு பெருத்து டற்கள்சிறுத்த பெற்றிமை என்றிடின் ஓது டற்பெரி தான வுஞ்சிறி தாயி டாசிறி தானவும் நீதி யிற்பெரி தாயி டாமுனம் உள்ள தன்மையின் நீடுமே. |
44 |
இயல்பு காண்இவை யென்னில் வேறிசை பெண்ணோ டாணிரு தன்மையாஞ், செயல்கொ ளாஇவர் செய்தி காரண மாக வந்து செனிப்பதென், இயல்ல தாமுடல் பூத காரிய மாவ தும்மில்ஆஆ யாகுமால், மயல தாம்பிஆஆ யாலொ ருத்தன் வகுத்த தன்மையின் வந்ததே. |
45 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், தாயி, சிவஞான, சாத்திரங்கள், பரபக்கம், சித்தாந்த, டற்பெரி, தன்மையின், இலக்கியங்கள், வன்ன, அறிவு