சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பழுதி லாமறை கண்ட நூல்பழு தின்றி யுண்டது பாரின்மேன், மொழிவர் சோதிட முன்னி யின்னது முடியு மென்பது முன்னமே, அழிவி லாதது கண்ட னம்அவை யன்றி யுஞ்சில ஆகமங்களின், எழுதி யோர்படி என்று கொண்டிரு நிதியெ டுப்பதும் எண்ணிடே. |
36 |
பூத மானவை நித்த மென்று புகன்ற தென்னை உருக் களாய், ஆத லோடழி வாகு மாதலி னாக்கு வோரவர் வேண்டிடும், காத லோடு கடாதி மண்கொ டியற்று வோருளர் கண் டனம், சீத நீரி லெழுந்த கொப்புள் நிகழ்ந்த மாருதச் செய்கையே. |
37 |
நீரின் வந்தெழு கொப்புள் நீரது வாயெ ழும்நிகழ் பூதமும் ஓரின் வேறுணர் வாயெ ழாஅவை பூத மாகி உதித்திடும் தேரின் நூறடை காய்செ றிந்தவை சேர வேறு சிவப்பெழும் பாரி னிற்பிரி யாது புந்தி பழிப்பு டம்பு கிடக்கவே. |
38 |
கூறு சேர்வையின் வந்த போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே, வேறு வேறு புலன்கு ணங்கள் உடற்கண் வந்து விளைந்ததென், நூறு காயடை கூடும் வேறொரு வன்ந னாலென நோக்கிநீ, தேறு பூத செயற்கும் வேண்டும் ஒருத்த னென்று தௌ¤ந்திடே. |
39 |
ஆன ஐம்பொறி உண்டி நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய், ஊனில் வந்திடு முன்பி லாதவை யென்று ரைக்கின் உலூதைபோல், வானின் வந்திடும் மாதர் ஆண்அலி யாகி மானுடர் ஆதியாய், யோனி பன்மையும் இன்று பூதம் உறும்பு ணர்ச்சியொர் தன்மையே. |
40 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், வேறு, சிவஞான, சாத்திரங்கள், பரபக்கம், சித்தாந்த, வாயெ, ஆதியாய், இலக்கியங்கள், கண்ட, கொப்புள்