சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
கார ணம்அவை யென்ற தென்னை கடாதி போல்நிகழ் காரியம், நேர ணைந்து சமைந்து நின்றிடும் என்ப தும்அது நேர்கிலோம், போர ணைந்திடு மொன்றொ டொன்று பொருந்து மாகில் வருந்தியும், நீர ணைந்தொரு தீயி னின்றது கண்ட தாயின் நிகழ்த்திடே. |
46 |
பூத மேவு புணர்ச்சி யேபுரி காய காரண மாகுமேல் காதல் ஆணொடு பெண்ணும் மேவு புணர்ச்சி ககரண மாவதெ ஆதி யேஉல கத்தில் ஆணொடு பெண்ணு மாயணை காரியம்(ன்) நாதன் நாயகி யோடு கூடி நயந்த காரணம் என்பரே. |
47 |
கந்தம் வெம்மை கலந்தி டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை சந்த னந்தழல் சார நீரிரு தன்மை யுற்றிடு மாறதோர் தந்த கன்மம் இரண்ட ணைந்து தருஞ்சு கத்தொடு துக்கமும் சிந்தி யாஎழு சீவ னுற்றிடும் அஅறு டற்கிலை தேறிடே. |
48 |
இன்பம் எய்தி இருந்து நீவினை இல்லை இங்கியல் பென் றிடில், துன்பம் எய்திடு வானென் மற்றிது சொல்லி டாய் சொல வல்லையேல், முன்பு செய்திடு கன்ம மென்றறி கன்ம மும்முதல் வன்னறிந், தன்பி னாலுறு விக்கு மப்பயன் ஆங்க மைப்பொ டநாதியே. |
49 |
அநாதி யேலமை வின்றெ னின்மல மாஆஆ கன்மம் அணுச்சிவன் அநாதி கன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்மம் உடற்செயா அநாதி காரிய மாமு டற்கள் அசேத னம்மணை யாவறிந்(து) அநாதி யாதி அமைக்க வேண்டும் அமைப்பி னோடும் அநாதியே. |
50 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், கன்மம், நூல்கள், அநாதி, சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், பரபக்கம், சித்தாந்த, கன்ம, ஆணொடு, காரியம், இலக்கியங்கள், ணைந்து, மேவு, புணர்ச்சி