சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஊடுவ துணாவ துற்ற கலவிமங் கையரை யுள்கி வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின் கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை பேயாய் நீடுவ தின் முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர். |
31 |
வீட்டினை உளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர் நாட்டினில் அரச னாணைக் கிசையவே நடந்து நாளும் ஈட்டிய பொருள்கொண் டிங்கே இன்பத்துள் இசைந்தி டீரே. |
32 |
உலகாயதன்மத மறுதலை
உள்ள தாவது கண்ட தென்றுரை கொண்ட தென்னுல கத்துநீ, பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப் பெற்ற தாயொடு தந்தையைக், கள்ள மேபுரி கால னாருயி ருண்ண வின்றொரு காளையாய், மௌ¢ள வேயுள ரென்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே. |
33 |
இடித்து மின்னி இருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென், றடுத்த தும்அகில் சந்த முந்தி அலைத்து வார்வுனல் ஆறுகொண், டெடுத்து வந்திட, மால்வ ரைக்க ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று, முடித்த தும்இவை காட்சி யன்றனு மான மென்று மொழிந்திடே. |
34 |
காண்ட லோஅநு மான மாவதும் காட்சி மன்னதும் காட்சியேல், பூண்ட பூத உடம்பி னுள்எழு போத மென்கொடு கண்டனை, மாண்ட வாயின் மனங்கொள் ஞான முணர்ந்த தும்அநு மானமென், றீண்டு பூத மியைந்த திவ்வுடன் என்ப தென்பிர மாணமே. |
35 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், காட்சி, இலக்கியங்கள்