சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத் தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய் கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே. |
26 |
ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பாற் பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியயோரானா£ ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டு மாயின் வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின். |
27 |
தையலார் ஊட லாடத் தாமவ ரோடுங் கூடிச் செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா மையல்மா னுடர்பொய் மார்க்க வேடத்தே மாய்கின் றாரே. |
28 |
வாசமார் குழலி னார்கள் மணிஅல்குல் தடத்தே மூழ்கி நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்திடாதே மாசுலா மனத்தோரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ. |
29 |
மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகலமூழ்கும் புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே. |
30 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், செவ்வாய், இலக்கியங்கள், வாசமார்